வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: வியாழன், 8 செப்டம்பர் 2016 (11:11 IST)

பர்மா, ஜாக்சன் துரை இயக்குனரின் கொலை கதை

பர்மா, ஜாக்சன் துரை படங்களை இயக்கிய தரணீதரன் அடுத்து ஒரு த்ரில்லர் கதையை படமாக்குகிறார். நவம்பரில் படம் தொடங்குகிறது.


 
 
குற்றமே தண்டனை போன்று ஒரு கொலையை சுற்றி நிகழும் கதையைத்தான் அவர் இயக்கப் போகிறார். 
 
மெட்ரோ படத்தில் நடித்த சிரிஷ் நாயகன். படத்தைக் குறித்து பேசிய சிரிஷ், தரணீதரன் சொன்ன கதை பிடித்ததால் உடனே நடிக்க ஒப்புக் கொண்டதாக கூறினார்.
 
முழுக்க சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் இப்படம் படமாக்கப்படுகிறது.