வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வியாழன், 28 மார்ச் 2019 (20:21 IST)

பாபி சிம்ஹாவுக்கு ஆணவம் அதிகம்! நடிக்க விடமாட்டோம்! - தயாரிப்பாளர் சங்கம் கோபாவேசம்

நடிகர் பாபிசிம்ஹாவுக்கு பதிலாக கிராபிக்ஸ் செய்து படம் எடுத்ததாக இயக்குநர் ஜான் பால்ராஜின் ’அக்னி தேவ்’ படத்திற்கு கோவை மாவட்ட முதலாவது கூடுதல் சார்பு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்தது.
தனக்குப் பதிலாக டூப் போட்டும் கிராபிக்ஸ் செய்தும் அக்னி தேவ் படத்தை எடுத்துள்ளார் இயக்குநர் ஜான் பால்ராஜ் படம் எடுத்துள்ளார். எனவே அக்னி தேவ் படத்தை வெளியிடக் கூடாது என்று கோரிக்கை விடுத்திருந்தார் பாபிசிம்ஹா.
 
இம்மனுவை விசாரித்த நீதிமன்றம் இப்படத்தினை வெளியிடுவதில் உள்ள உண்மைத் தன்மைகளை ஆராய வேண்டி நீதிமன்ற ஆணையராக வழக்கறிஞர் கார்த்திகாவை நியமித்தது.
 
மேலும் நீதிமன்ற ஆணையர் அறிக்கையை சமர்பித்து மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை அகினி தேவி படத்தை வெளியிடுவது தொடர்பாக முன்பிருந்த நிலையே தொடரும் என்று கோவை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நீதிபதிகள் தெரிவித்தனர்.
 
இந்நிலையில் சில தியேட்டரில் படம் ஓடாமல் தன்னை வைத்து படம் எடுத்த ஒரு தயாரிப்பாளரையே குற்றம் சுமத்தி 4  தயாரிப்பாளரை வெளியே தலைகாட்டாமல் செய்துள்ளதாக இயக்குநர் பிராவீன் காந்த் தெரிவித்துள்ளார்.
 
அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது.
 
மேலும் உதயம் தியேட்டரில் படம் பார்த்துக்கொண்டிருந்த ஆடியன்ஸை ஒருபேட்டி கொடுத்து பாபிசிம்ஹா கெடுத்தார். ஆவணத்தால் தயாரிப்பாளரை அழிக்க நினைக்கிறார்.
நடிகை மதுபாலா படத்தில் சிறப்பாக நடித்துள்ளார். அதனால் அவருடைய போர்ஷனை குறைக்க வேண்டும் என்று கூறியுள்ளார் பாபிசிம்ஹா. அதை தயாரிப்பாளர் ஏற்காததால் இந்த பிரச்சனை வந்துள்ளது. 
 
அதனால் நடிகார் பாபிசிம்ஹாவைப் போன்ற ஒரு கலைஞன் தேவை இல்லை என்று கூறினார்.