1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: திங்கள், 19 செப்டம்பர் 2016 (10:29 IST)

ரேஷ்மியுடன் விவாகரத்து குறித்து விளக்கம் தந்த பாபிசிம்ஹா

ரேஷ்மியுடன் விவாகரத்து குறித்து விளக்கம் தந்த பாபிசிம்ஹா

நடிகர் பாபி சிம்ஹாவும், நடிகை ரேஷ்மியும் மேனனும் காதலித்து கடந்த ஏப்ரல் மாதம் 22ம் தேதி திருமணம் செய்து கொண்டார். குடும்பத்தார் முன்னிலையில் திருப்பதியில் திருமணம் நடந்தது. திருமணமாகி ஓராண்டு கூட ஆகாத நிலையில் பாபி சிம்ஹாவும், ரேஷ்மி மேனனும் விவாகரத்து பெற முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகின.

 
 
இதனை தொடர்ந்து விவாகரத்து செய்திகளை பார்த்த நடிகர் பாபி சிம்ஹா தனது ஃபேஸ்புக் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். நடிகை அமலா பால் தனது காதல் கணவர் ஏ.எல். விஜய்யை பிரிந்துவிட்டார். சூப்பர் ஸ்டாரின் இளைய மகள் சவுந்தர்யா தனது காதல் கணவர் அஷ்வினை பிரிந்து வாழ்கிறார். இது என்னடா கோலிவுட்டில் அடுத்தடுத்து பிரிவுகளாக உள்ளதே என்று நினைக்கும்போது மேலும் ஒரு விவாகரத்து செய்தி வெளியானது.
 
இந்நிலையில் கேள்விப்பட்ட அச்செய்தி என்னவெனில், பாபி சிம்ஹா எப்பொழுதும் குடிபோதையில் இருப்பதாகவும், வீட்டிற்கே செல்வது இல்லை என்றும் கூறப்பட்டது. சொந்தப் பட முயற்சியும் தேறாது என்று தெரிய வந்ததால் சிம்ஹாவுக்கும், ரேஷ்மிக்கும் இடையே சண்டை ஏற்பட்டு பிரிவு வரை வந்துவிட்டதாக தகவல் வெளியானது.
 
இது குறித்து ஃபோன் செய்பவர்களிடம் அவர் கூறுவது நாங்கள் சந்தோஷமாக உள்ளோம். தற்போது நாங்கள் பிரிப்பது பீட்சாவை மட்டும்தான் என்று தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.