வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: திங்கள், 24 ஜூலை 2017 (12:34 IST)

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நமீதாவை விடாமல் துரத்தி துரத்தி கட்டிப்பிடித்து வழியனுப்பிய சிநேகன்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்றைய எலிமினேஷனில் இறுதி சுற்றில் கணேஷ் வெங்கட்ராமும், நமீதாவும் இருந்தனர். அதில்  கணேஷ் வெங்கட்ராமை நேயர்கள் அதிக வாக்களித்து காப்பாற்றியதால் நமீதா வெளியேற்றபட்டார்.

 
ஏற்கனவே நிகழ்ச்சியின்போது நமீதா கூறுகையில், நம்மை போன்றவர்களை எல்லாம் பார்வையாளர்களுக்கு பிடிக்காது, ஜூலி  மற்றும் ஓவியாவை தான் அனைவருக்கும் பிடித்திருக்கிறது. அவர்களில் யாராவது ஒருவர் தான் ஜெயிப்பார் என்று ரைசாவிடம் கூறியிருந்தார்.
 
பிக்பாஸ் வீட்டில் வாரத்திற்கு ஒருவர் வெளியேறி செல்வது என்பது விதி, இன்று வீட்டிலிருந்து நடிகை நமீதா வெளியேறினார்.  அப்போது வீட்டை விட்டு வெளியேறும் முன்பாக ஒவ்வொருவரிடத்திலும் கை கொடுத்து மற்றும் கட்டிப்பிடித்து சென்று வருகிறேன் என நமீதா கூறினார். ஆனால் சிநேகன் மட்டும் விடாமல் துரத்தி துரத்தி நமீதாவை கட்டிப்பிடித்து வழி அனுப்பி  வைத்த சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
ஆனால் சிநேகன் ஒருபடி மேலே சென்று, மூன்று முறை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து வழி அனுப்பி வைத்தார். மேலும்  நமீதா கூறிகையில் என் வாழ்வின் மறக்க முடியாத தருணங்கள் இது என்றும். சிநேகன் உணவோடு அன்பு, பாசம் அனைத்தும்  போட்டு சமைத்து கொடுத்ததாக கூறினார். தொடர்ந்து கமலிடம் பேசுகையில், சினேகனுக்கு எதையும் தாங்கும் இடிதாங்கி  பட்டம் கொடுத்துள்ளார் நமீதா.
 
தொடர்ந்து பேசிய முதலில் வீட்டிற்கு சென்றதும் எனது செல்ல நாய்குட்டி மற்றும் கேரமல், சாக்லெட்டை இத்தனை நாள் பிரிந்து இருந்ததில்லை. சில நாட்கள் அவனுடன் செலவிடப்போகிறேன். பிறகு பெற்றோரை சந்திக்கப் போவதாகவும் கூறினார்.