1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : வியாழன், 8 அக்டோபர் 2020 (15:29 IST)

என்ன வெளிய வந்து நோண்டுறாரு... அயோ இவங்க பிரச்சனையிலே பிக்பாஸ் முடிஞ்சுடும் போல!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த இரண்டு நாட்களாகவே அனிதா தொடர்ந்து ப்ரோமோக்களில் இடம்பெற்று விடுகிறார். சுரேஷ் சக்ரவர்த்தியிடம் ஏற்பட்ட வாக்குவாதத்தை தொடர்ந்து அனிதா மக்களால் வெறுக்கப்படும் நபராக பார்க்கப்படுகிறார்.

பெரியவர்களுக்கு மரியாதையை கொடுப்பதில்லை, பேச்சில் அடாவடி, நடத்தை திமிரு என அனிதாவை ஒரு ஹெட்வெயிட் பெண்ணாக இந்த இரண்டு நாளில் சித்தரித்துவிட்டனர் ரசிகர்கள். வெளியில் அவர் எடுத்து வைத்த பெயர் முழுக்க பிக்பாஸ் வீட்டில் நுழைந்த ஜூலி போல் கெடுத்துக்கொள்வார் என்றெல்லாம் பேச்சு அடிபட்டது. ஆனால் தற்ப்போது சுரேஷ் , அனிதா இவங்க ரெண்டு பேரையும் யாருக்கும் பிடிக்கவில்லை.

சற்றுமுன் வெளியாகிய மூன்றாவது ப்ரோமோவில், ரேகா , சனம் ஷெட்டி உள்ளிட்டோர் சுரேஷ் சக்ரவர்த்தி ஆதரவாக போர்க்கொடி துக்கியுள்ளனர். கார்டன் ஏரியாவில் அமர்ந்திருக்கும் அனிதாவிடம் " எனக்கும் சனம் ஷெட்டிக்கும் எந்த பிரச்னையும் இல்லை. எனக்கு இந்த மேடம் கூட தான் பிரச்சனை என கூறி சும்மா இருந்த அனிதாவை சொறிஞ்சு விட்டு பிரச்னையை பெரிதாக்குகிறார் சுரேஷ். மூணு நாளா இவங்கள பேரையும் வச்சு இம்சை பண்றீங்க. ப்ரோமோவுல வேற யாரையாச்சும் காட்டுங்கடா டேய்..