செவ்வாய், 30 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha
Last Updated : புதன், 11 செப்டம்பர் 2019 (12:32 IST)

10 வருடத்திற்கு பிறகு அப்பாவை பார்த்து கதறி அழுத லொஸ்லியா

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வீடியோவில் யாரும் எதிர்பார்க்காத வகையில் ப்ரீஸ் டாஸ்க் கொடுத்துள்ளனர். 


 
ப்ரீஸ் டாஸ்க்கில் முகன் மற்றும் சேரனின் வருகைக்கு பிறகு தற்போது லொஸ்லியாவின் தந்தை என்ட்ரி கொடுத்துள்ளார். இதற்கு முன்னர் பிக்பாஸில் இருந்து லொஸ்லியாவின் வீட்டில் இருப்பவர்களுக்கு அழைப்பு விடுத்த போது அவர்கள் வர மறுத்ததாகவும் அதனால் தான் ரகசிய அறையில் இருந்த சேரப்பாவை பிரீஸ் டாஸ்கில் மீண்டும் உள்ளே அழைத்ததாகவும் நெட்டிசன்ஸ் கமெண்ட்ஸ் செய்து தெரிவித்து வந்தனர்.  
 
ஆனால், தற்போது பிக்பாஸ் எல்லோருக்கும் இன்ப அதிர்ச்சியை கொடுக்கும் விதமாக லொஸ்லியாவின் தந்தையை உள்ளே அழைத்து வந்துள்ளனர். அவர் உள்ளே வந்ததும் லொஸ்லியா கதறி அழுது உணர்ச்சியை வெளிப்படுத்தினார். சுமார் 10 வருடங்களுக்கு பின்னர் தந்தையை பார்ப்பதால் லொஸ்லியா உணர்ச்சியை கட்டுப்படுத்தமுடியாமல் அழுத்துவிட்டார்.
 
இந்த வீடியோவை கண்ட நெட்டிசன்ஸ் " கவினுக்கு இனிமேல் தான் சம்பவம் இருக்கு" என்று கூறி கிண்டலடித்து வருகின்றனர்.