1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: செவ்வாய், 12 மே 2015 (12:15 IST)

மகாபலி உரிமையை விற்ற ஸ்டுடியோ கிரீன்

எஸ்.எஸ்.ராஜமௌலியின் பாகுபலி தமிழில் மகாபலி என்ற பெயரில் வெளியாகிறது. அனுஷ்கா, பிரபாஸ், ரம்யா கிருஷ்ணன், ராணா நடித்துள்ள இந்தப் படத்துக்கு தென்னகம் முழுவதும் அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது.
மகாபலியின் தமிழக திரையரங்கு உரிமையை ஞானவேல்ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் வாங்கியது. இப்போது திடீரென்று அந்த உரிமையை தேனாண்டாள் ஃபிலிம்ஸுக்கு கைமாற்றிவிட்டுள்ளது. மகாபலியை தேனாண்டாள் வெளியிட உள்ளது.
 
இந்த திடீர் மாற்றத்துக்கான காரணம் தெரியவில்லை.