1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வெள்ளி, 1 மே 2015 (11:45 IST)

ஆபாச செய்கை - ஃபேஸ்புக் துணையுடன் விஷமிகளை சிக்க வைத்த நடிகை

ஃபேஸ்புக் போன்ற இணைய பயன்பாடுகள் தவறாகப் பயன்படுத்தப்படுவதைப் போன்று, சில நல்ல செயல்களுக்கும் அதனை உபயோகப்படுத்தலாம். அதைத் தான் தெலுங்கு நடிகை அஸ்மிதா கர்னானி செய்திருக்கிறார்.
 
சில தினங்கள் முன்பு கர்னானி தனது காரில் சென்ற போது, பைக்கில் வந்த இரண்டு இளைஞர்கள் அவரை நோக்கி ஆபாச சைகை செய்திருக்கிறார்கள். அவர்களையும், அவர்களின் பைக் நம்பரையும் போட்டோ எடுத்துக் கொண்ட கர்னானி, அதனை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து, சம்பந்தப்பட்ட ஆபாசப் பார்ட்டிகளை பிரபலப்படுத்தும்படி கேட்டுக் கொண்டார்.
 

 
அத்துடன் அவர்களது புகைப்படத்தை போக்குவரத்து காவல்துறையின் ஃபேஸ்புக் பக்கத்திலும் பகிர்ந்தார். அதனைத் தொடர்ந்து போக்குவரத்து காவல்துறையினர் சம்பந்தப்பட்ட இரு இளைஞர்களையும் கைது செய்தனர்.
 
ஆபாச சைகை போன்று எதுவும் செய்யாத ஒருவரையும் இதுபோல் புகைப்படம் எடுத்து, பிரபலப்படுத்தி, அவரது பெயரை சீரழித்து, கைது செய்ய வைக்க முடியும் என்பதுதான் கர்னானியின் இந்த புத்திசாலித்தனமான வழிமுறையின் ஒரே ஆபத்து என்பதும் கவனிக்கத்தக்கது.