ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 24 நவம்பர் 2020 (11:45 IST)

5 வருடங்களுக்கு பிறகு தமிழில் நடிக்கும் வில்லன் நடிகர்!

வில்லன் நடிகராக தமிழ் சினிமா ரசிகர்களால் அறியப்பட்ட ஆஷிஷ் வித்யார்த்தி நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார்.

தில் படத்தில் வெட்டு சங்கராக நடித்து பிரபலமானார் ஆஷிஷ் வித்யார்த்தி. அதன் பிறகு பல படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகராக நடித்த அவர் கடைசியாக 2015 ஆம் ஆண்டு வெளியான அனேகன் படத்தில் நடித்தார். அதன் பின் தமிழ் படங்களில் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் இந்தி மற்றும் பெங்காலி ஆகிய படங்களில் நடித்து வந்தார்.

இந்நிலையில் 5 ஆண்டுகளுகுக்குப் பிறகு இப்போது ஸ்ரீகாந்த், வித்யா பிரதீப் மற்றும் பலர் நடிக்கும் சைக்காலஜிக்கல் த்ரில்லர் படமான எக்கோவில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை நவீன் கணேஷ் இயக்க, ஒளிப்பதிவாளராக கோபிநாத், இசையமைப்பாளராக ஜான் பீட்டர், எடிட்டராக சுதர்ஷன் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.