வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Ilavarasan
Last Modified: திங்கள், 25 ஆகஸ்ட் 2014 (21:09 IST)

புதுப்படம் தயாரிக்கும் ஆர்யா, இந்தமுறையும் ஜீவா சங்கருக்கே வாய்ப்பு

ஷோ த பீப்பிள் என்ற படநிறுவனத்தை தொடங்கிய ஆர்யா, தொடர்ந்து படங்கள் தயாரிக்கப் போவதாக அறிவித்து பல வருடங்கள் ஆகிறது. படித்துறை என்ற படத்தையும் தயாரித்தார். பாலுமகேந்திராவின் முதன்மை சிஷ்யரான சுகா இயக்கிய அப்படம் இதுவரை வெளிவரவில்லை. இனி வெளிவருவதற்கான சாத்தியமும் தெரியவில்லை.


 
 
ஆர்யா மீண்டும் தனது தம்பி சத்யாவை ஹீரோவாக்கி அமரகாவியம் என்ற படத்தை தயாரித்தார். நான் படத்தை இயக்கிய ஜீவா சங்கர் இந்தப் படத்தை இயக்கினார். த்ரிஷா, நயன்தாரா, பூஜா போன்ற முன்னணி நடிகைகள் கலந்து கொள்ள பிரமாண்டமாக பாடல்களை வெளியிட்டனர். செப்டம்பர் 5 படம் வெளியாகிறது.
 
இதையடுத்து மீண்டுமொரு படத்தை ஆர்யா தயாரிக்கிறார். இந்தப் படத்தையும் ஜீவா சங்கரே இயக்குகிறார். படத்தின் ஸ்கிரிப்ட் எழுதும் பணி தற்போது நடந்து வருகிறது. ஸ்கிரிப்டை எழுதி முடித்த பிறகே படத்தில் யார் ஹீரோவாக நடிப்பது என்பதை முடிவு செய்யவிருப்பதாக ஜீவா சங்கர் தெரிவித்தார்.
 
ஜீவா சங்கரின் நான் படம் ஆங்கில படமொன்றின் தழுவல். அமரகாவியம் 2006 -இல் வெளியான இரு கொரியன் படங்களின் கலவை என்று தகவல் உள்ளது. செப்டம்பர் 5 அதில் எத்தனை சதவீதம் உண்மை என்பது தெரிந்துவிடும்.