1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: திங்கள், 27 ஜூலை 2015 (14:46 IST)

அரவிந்த்சாமி - படத்தில் வில்லன் படப்பிடிப்பில் ஹீரோ

மோகன் ராஜா இயக்கியிருக்கும், தனி ஒருவன் படத்தில் வில்லனாக நடித்துள்ளார் அரவிந்த்சாமி. குழப்பம் வேண்டாம். தளபதியில் அறிமுகமாகி ரோஜா, பம்பாய் படங்களில் நடித்து இளம் பெண்களின் கனவு காளையாக வலம்வந்த அதே அரவிந்த்சாமிதான். காலம் அவரையும் வில்லன் நாற்காலியில் உட்கார வைத்துள்ளது.
படத்தில்தான் அவர் வில்லன். ஆனால், படப்பிடிப்பில்? 
 
தனி ஒருவன் படத்தில் நடித்திருக்கும் ஜெயம் ரவியும், கணேஷ் வெங்கட்ராமனும் அரவிந்த்சாமியின் படங்களைப் பார்த்து வளர்ந்தவர்கள். அவரது ரோஜா, பம்பாய் படங்களைப் பார்த்துதான், சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற உந்துதலே வந்தது என்கிறார் கணேஷ் வெங்கட்ராமன். தனது ஆதர்ஷ நடிகரை பார்க்கையில் ஒருவருக்கு எப்படியிருக்கும்?
 
அரவிந்த்சாமியை முதலில் அரங்கில் பார்த்தபோது எல்லோரையும் போல கணேஷ் வெங்கட்ராமனுக்கும் உதறல் எடுத்திருக்கிறது. பேசுவாரா மாட்டாரா கோபப்படுவாரா என்றெல்லாம் குழப்பம்.
 
முதல்நாளே இந்த தடுமாற்றத்தையெல்லாம் தனது சகஜமான பேச்சால் களைந்திருக்கிறார் அரவிந்த்சாமி. ரோஜா, பம்பாய் படங்களின் அனுபவத்தை அவர் சொல்ல, கணேஷ் வெங்கட்ராமனும், ஜெயம் ரவியும் கேட்டு வியந்திருக்கிறார்கள்.
 
வில்லனாக நடித்தாலும் இன்னும் ரசிகர்களின் உள்ளங்களில் ஹீரோவாகதான் இருக்கிறார் அரவிந்த்சாமி.