வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: திங்கள், 31 ஆகஸ்ட் 2015 (18:27 IST)

மார்பிங் மாஃபியாக்களின் ஆபாச வலையில் சிக்கிய பிரேமம் அனுபமா

நடிகைகளின் புகைப்படங்களில் தலையை மட்டும் வேறு கவர்ச்சி உடலுடன் ஒட்ட வைத்து இணையத்தில் வீடியோவாகவும், புகைப்படங்களாகவும் புழங்கவிடும் மார்பிங் மாஃபியாக்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. பிரபல நடிகைகளில் யாரும் இந்த கும்பலின் மார்பிங் வேலையிலிருந்து தப்பித்ததில்லை.
 

 
சமீபத்தில் நடிகை ஆஷா சரத் இந்தப் பிரச்சனையில் மாட்டிக் கொண்டார். மற்ற நடிகைகள் போல் இல்லாமல் இதனை காவல்துறையின் கவனத்துக்கு எடுத்துச் சென்றார். தொடர்ச்சியாக அதுபற்றி கேள்விகள் கேட்டார். கடைசியில் அந்த குற்றச்செயலை செய்த இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
 
இந்நிலையில், மலையாள பிரேமம் படத்தில் நடித்த அனுபமாவும் மார்பிங் மாஃபியாக்களின் கைவரிசைக்கு உள்ளாகியிருக்கிறார். இவரது படத்தையும் மார்பிங்கில் ஆபாசப் படமாக உலவவிட்டுள்ளனர்.
 
இதனை இப்படியே விட்டுவிடப் போவதில்லை, ஆஷா சரத் போல புகார் தந்து சம்பந்தப்பட்டவர்களை தண்டிப்பேன் என்று உறுதி எடுத்திருக்கிறார் அனுபமா.