1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 19 செப்டம்பர் 2021 (09:07 IST)

அன்பெல் சேதுபதி படத்தில் இயக்குனர் சொன்ன தகவல்… அதிர்ச்சியில் ரசிகர்கள்!

விஜய் சேதுபதி நடித்த அனபெல் சேதுபதி திரைப்படம் சூரமொக்கை என் ரசிகளிடம் வாங்கிக் கட்டி வருகிறது.

கொரோனா முதல் லாக்டவுனுக்குப் பிறகு விஜய் சேதுபதி, யோகி பாபு மற்றும் டாப்ஸி ஆகியோர் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் ஜெய்ப்பூர் ஆகிய இடங்களில் நடந்தது. இந்த படத்துக்கு அனபெல் சுப்ரமண்யம் என பெயர் வைக்கப்பட்டு பின்னர் அனபெல் சேதுபதி என மாற்றப்பட்டுள்ளது.

இந்த படத்தின் படப்பிடிப்பு எப்போதோ முடிந்து விட்ட நிலையில் ரிலிஸாகாமல் முடங்கிக் கிடந்தது. இந்நிலையில் இப்போது டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் நேரடியாக கடந்த வாரம் வெளியிட்டது. ஆனால் படம் சூர மொக்கையாக இருப்பதால் ரசிகர்கள் தெறித்து ஓடுகின்றனர். மேலும் விஜய் சேதுபதியிடம் இதுபோல மொக்கைப் படங்களாக நடிக்க வேண்டாம் எனக் கோரிக்கையும் வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் அனபெல் சேதுபதி பார்த்த ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் வரும் என இயக்குனர் அறிவித்திருக்கிறார். முதல் பாகமே தாங்கல… இரண்டாம் பாகமா என புலம்பி தள்ளுகின்றனர் ரசிகர்கள்.