1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Suresh
Last Updated : வியாழன், 27 ஆகஸ்ட் 2015 (15:37 IST)

கதைக்காக காத்திருந்தேன் - ஐஸ்வர்யா ராய் பேட்டி

5 வருடங்களுக்குப் பிறகு ஐஸ்வர்யா ராய் நடித்துள்ள படம், ஜாஸ்பா. ஐஸ்வர்யா ராய் நடித்திருக்கிறார் என்பதைத் தாண்டி ஜாஸ்பாவுக்கு எதிர்பார்ப்பு இருக்கிறது.


 

 
ஐஸ்வர்யா ராய் நடிக்காத இந்த ஐந்து வருடங்களில் வித்யா பாலன், கங்கனா ரனவத் என பலரும் முடிசூடிவிட்டனர். கரீனா இன்னும் அதே முதலிடத்தில். கத்ரினா, தீபிகாவின் மவுசு கூடியிருக்கிறதே தவிர குறையவில்லை. அதேபோல்தான் ப்ரியங்கா சோப்ராவும்.
 
இந்த வட்டத்தில் நானும் இருக்கிறேன் என்பதை காட்ட ஐஸ்வர்யா ராய்க்கு இருக்கும் துருப்புச் சீட்டு, ஜாஸ்பா. மும்பையில் நடந்த இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் தனது நிலையை விளக்கினார் ஐஸ்வர்யா ராய்.
 
அவர் மும்பையில் அளித்த பேட்டி வருமாறு:-
 
"நான் 5 வருடங்களாக படங்களில் நடிக்கவில்லை. ஆனாலும், சினிமாவைவிட்டு ஒதுங்கிவிட்டதாக உணரவில்லை. ஏற்கனவே நடிகராக இருந்த ஒருவர் படங்களில் நடிக்காமல் இருந்தாலும், அவர் எப்போதுமே நடிகர்தான் என்று மூத்த நடிகர்கள் சொல்வதுண்டு. அது உண்மை என்பதை எனது அனுபவத்தில் உணர்ந்து இருக்கிறேன்.
 
நடிகர், நடிகையாக இருப்பவர்களுக்கு தங்கள் வேலையில் திருப்தி ஏற்படவேண்டும். அது ரொம்ப முக்கியம். திருமணத்துக்கு முன்பும் நடித்தேன், இப்போதும் நடித்துக்கொண்டு இருக்கிறேன். எப்போதும் அர்ப்பணிப்பு உணர்வோடுதான் எனது கடமையை செய்கிறேன்.
 
தாய் என்ற உறவிலும் உறுதியாக இருக்கிறேன். நல்ல கதைக்காக காத்து இருந்தேன். அந்த கதை இப்போது அமைந்து இருக்கிறது. இந்த படத்தில் சம்பளத்துக்கு பதில் லாபத்தில் பங்கு கேட்கிறீர்களா என்று என்னிடம் கேட்கின்றனர். அதற்கு பதில் சொல்லமுடியாது”. இவ்வாறு ஐஸ்வர்யாராய் கூறினார்.