1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Cauveri Manickam
Last Modified: செவ்வாய், 25 ஏப்ரல் 2017 (14:59 IST)

மீண்டும் இணையும் ஹரி – சூர்யா

‘சிங்கம்’3’யைத் தொடர்ந்து, மறுபடியும் சூர்யாவை வைத்து படம் இயக்கப் போகிறார் ஹரி என்கிறார்கள்.
 
 
சூர்யாவை வைத்து ‘ஆறு’, ‘வேல்’, ‘சிங்கம்’ படங்களை எடுத்தவர் இயக்குநர் ஹரி. அதுவும், ‘சிங்கம்’ மூன்று  பாகங்களைக் கடந்துவிட்டது. நான்காவது பாகமும் வரும் என க்ளூ கொடுத்திருக்கிறார்கள். இந்நிலையில், மறுபடியும் சூர்யாவை வைத்து படம் இயக்கப்போவதாகக் கூறியுள்ளார் ஹரி. ஆனால், இது ‘சிங்கம்’ படத்தின் நான்காவது பாகமாக  இருக்காதாம். புதிய கதையொன்றில் இருவரும் இணைகிறார்களாம். 
 
தற்போது, ‘சாமி’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குவதற்கான ஆரம்ப வேலைகளில் இருக்கிறார் ஹரி. இன்னும் மூன்று  மாதங்களில் ஷூட்டிங் போகிறார்கள். இந்தப் படத்தை முடித்தபிறகு சூர்யா படத்தின் வேலைகளைத் தொடங்க இருக்கிறார்  ஹரி. 
 
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் நடித்துவரும் சூர்யா, அடுத்து செல்வராகவன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். அதன்பிறகு, ஹரி படத்தில் நடிக்கப் போகிறார் சூர்யா.