1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By cauveri manickam
Last Modified: செவ்வாய், 18 ஏப்ரல் 2017 (13:38 IST)

நடிகையின் வாழ்க்கையை மாற்றிய விஜய் மில்டன்

‘கடுகு’ படத்தில் நடித்ததன் மூலம் தன்னுடைய சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாக நடிகை சுபிக்ஷா தெரிவித்துள்ளார்.
 

 

பாரதிராஜா இயக்கிய ‘அன்னக்கொடி’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சுபிக்ஷா. அந்தப் படத்தின் ரிசல்ட் பற்றித்தான் உங்களுக்கே தெரியுமே…. அதனால், அவரைச் சீண்டுவாரில்லை. அப்படியும், ஒருசில தமிழ்ப் படங்களில் நடித்தார். அதற்கு, ‘அன்னக்கொடி’யே பரவாயில்லை என்று நினைத்தார்கள் அந்தப் படங்களைப் பார்த்தவர்கள். அத்துடன், மலையாளம் மற்றும் கன்னடப் படங்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில், விஜய் மில்டன் இயக்கத்தில் இவர் நடித்து சமீபத்தில் வெளியான ‘கடுகு’ படம், இவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்துள்ளது. அதன் காரணமாக, பெரிய இயக்குநர்களின் படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். ஏ.வெங்கடேஷ் இயக்கத்தில் ‘நேத்ரா’, பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் ‘ரா ரா ராஜசேகர்’ ஆகிய படங்களில் சுபிக்ஷா தான் ஹீரோயின். அத்துடன், ‘பொதுநலன் கருதி’ என்ற படத்திலும் கமிட்டாகியுள்ளார். இன்னும் பல வாய்ப்புகளும் அவரைத் தேடி வருகிறதாம்.