வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Suresh
Last Updated : சனி, 20 செப்டம்பர் 2014 (12:04 IST)

புலி ஆதரவாளராக மாறிய ப்ரியாமணி

விலங்குகளின் நலனில் நடிகைகள் மிகுந்த அக்கறை காட்டுகிறார்கள். முன்னாள் நடிகை அமலா, இந்நாள் நடிகைகள் த்ரிஷா, ப்ரியாமணி என்று பலரும் மிருகங்களின் நலனுக்காக குரல் கொடுத்து வருகிறார்கள்.

 


தெரு நாய்களின் நலனுக்காக குரல் கொடுப்பதுடன், அவைகளின் நலனை எப்படி பேணுவது என்று சென்னை மேயருக்கு த்ரிஷா கடிதமும் எழுதினார். தெருநாய் ஒன்றை த்ரிஷா வளர்க்கவும் செய்தார். சமீபத்தில் அந்த நாய் இறந்தது.
 
த்ரிஷாவுக்கு நாய் என்றால் ப்ரியாமணிக்கு புலி. விலங்குகள் பாதுகாப்பு இயக்கத்துடன் இணைந்து பணியாற்றுகிற இவர், கண்காட்சிகளிலும், மிருகக்காட்சி சாலைகளிலும் புலிகளை கூண்டில் அடைத்து வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
 
புலிகளை கூண்டில் அடைத்து துன்புறுத்தக் கூடாது. அவைகள் சுதந்திரமாக நடமாடுவதற்கு வழிவகை செய்ய வேண்டும் என்றார்.
 
ஈழப்புலிகளைதான் இந்திய அரசு ஆதரிக்கவில்லை. ப்ரியாமணியின் இந்த புலி ஆதரவுக்காவது அரசு செவி சாய்க்குமா?