வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : ஞாயிறு, 22 ஜூலை 2018 (15:32 IST)

சான்ஸ் கிடைத்திருந்தால் ஸ்ரீரெட்டி இப்படி செய்திருக்க மாட்டார்: கஸ்தூரி

தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகை அதிர வைத்திருக்கும் ஸ்ரீரெட்டி, சான்ஸ் கிடைந்திருந்தால் யார் முகத்திரையையும் கிழித்திருக்க மாட்டார் என்று நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.

 
திரையுலகில் தனக்கு படவாய்ப்பு தருவதாக கூறி தன்னை பயன்படுத்திக் கொண்டதாக பிரபல இயக்குநர்கள் மற்றும் நடிகர்களை குறிப்பிட்டு குற்றம்சாட்டி தெலுங்கு திரையுலகை அதிரவைத்த ஸ்ரீரெட்டி தற்போது தமிழ் திரையுலகையும் அதிரவைத்துள்ளார். இதுகுறித்து நடிகை கஸ்தூரி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
 
அதில், சினிமாவுக்கு தேவையான தகுதியோ திறமையோ அதிர்ஷ்டமோ தனக்கு இல்லை, சமரசங்கள் செய்தாலாவது வாய்ப்பு கிட்டாதா என்று அந்த பெண் யோசித்ததாகவே தெரிகிறது.
 
ஸ்ரீரெட்டி செய்த மிக பெரிய தவறு என்ன என்று அவர் இன்று வரை உணர்ந்தாரா என்று தெரியவில்லை. சான்ஸ் கிடைத்திருந்தால் யார் முகத்திரையையும் கிழித்திருக்க மாட்டார். சினிமாவை மிக தவறாக எடைபோட்டதன் விளைவையே இப்பொழுது சந்தித்துக்கொண்டிருக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.