வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Murugan
Last Modified: வெள்ளி, 12 பிப்ரவரி 2016 (16:00 IST)

நடிகை லட்சுமிமேனனின் அதிரடி முடிவு : அதிர்ச்சியில் இயக்குனர்கள்

இனிமேல் கிராமத்து பெண் வேடம் மற்றும் தங்கை கதாபாத்திரங்களில் நடிக்கப் போவதில்லை என்று அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார் நடிகை லட்சுமிமேனன்.


 

 
லட்சுமிமேனன் அறிமுகமானது முதல், பெரும்பாலான படங்களில் கிராமத்து பெண்ணாகவே நடித்தார். அதனால் சேலை மற்றும் பாவாடை தாவணி அணிந்து நடித்து நடித்து அவருக்கு அலுத்து விட்டது போலும். எனவே, தனக்கு நகரத்து பெண்ணாகவே நடிக்க ஆசை, அப்போதுதான் விதவிதமாக நாகரீக உடை அணிய முடியும் என்று தன்னுடைய ஏக்கத்தை ஒரு நேர் காணலில் கூறியிருந்தார்.
 
அதன்பின், கதாநாயகியாக நடித்துக் கொண்டிருந்த அவர், திடீரென வேதாளம் படத்தில் அஜீத்தின் தங்கையாக நடித்தார். அதுபற்றி பேசிய அவர்  “அந்த காதாபாத்திரம் பிடித்திருந்தது. அதனாலேயே நடித்தேன். அந்த படத்தின் இயக்குனர் சிவா-வும் என்னுடைய கதாபாத்திரம் சிறப்பாக வர வேண்டும் என்பதில் கவனமாக இருந்தார். 
 
தற்போது ஜெயம் ரவியுடன் மிருதன் படத்தில் நடித்துள்ளேன். இதுபோன்ற புதிய முயற்சிகளில் என் பங்கும் இருப்பது சந்தோஷமாக இருக்கிறது. இனிமேல் கிராமத்து வேடங்களிலும், தங்கை கதாபாத்திரத்திலும் நடிப்பதில்லை என முடிவெடுத்திருக்கிறேன். ஏனெனில் இவர் ஒரே மாதிரியான வேடங்களில் நடிப்பார் என என் மீது யாரும் முத்திரை குத்திவிடக்கூடாது” என்று கூறினார்.
 
பொதுவாக, அவர் கிராமத்து பெண் கதாபாத்திரத்திற்குதான் பொருத்தமாக இருப்பார் என்று நினைத்த இயக்குனர்கள் இனி என்ன செய்வார்களோ!