வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Actor
Last Updated : புதன், 7 அக்டோபர் 2015 (15:05 IST)

நடிகர் சங்க தேர்தலில் விஷால் வேட்பு மனுவை வாபஸ் பெற்றார்

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் இம்மாதம் 18ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் பாண்டவர் அணியின் சார்பாக தலைவர் பதவிக்கு வேட்பு மனுவை தாக்கல் செய்த நடிகர் விஷால், தனது வேட்பு மனுவை இன்று வாபஸ் பெற்றார்.


 

 
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் இம்மாதம் 18ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் சமீபத்தில் நிறைவடைந்தது. மேலும், வேட்பு மனுக்களை திரும்ப பெற நேற்று கடைசி நாளாக இருந்தது.

தற்போது தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலுக்காக சரத்குமார் அணியினரும், விஷால் அணியினரும் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர். தினம் தோறும் இரு அணியினரும் பல நடிகர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர்.
 
இந்நிலையில், தலைவர் பதவிக்கான வேட்புமனுவை, நடிகர் விஷால் இன்று வாபஸ் பெற்றார். விஷால் தலைவர் பதவிக்கும், செயலாளர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். தலைவர் பதவிக்கு நாசரின் மனு ஏற்கப்பட்டதால் விஷால் தற்போது வாபஸ் பெற்றுள்ளார்.

அப்போது, செய்தியாளர் கேட்ட கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த அவர், ”சரத்குமார் அணியினருடன் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை” என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். 
 
நாளை தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலுக்காகன இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.