1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 5 பிப்ரவரி 2019 (10:16 IST)

500 ரூபா கூட இல்லாம இருந்த, இப்போ வேற லெவல்ல இருக்கேன்: பிரபல நடிகர் பெருமிதம்

தன்னுடைய வாழ்க்கை பயணத்தை டிவிட்டர் மூலம் நடிகர் விஜய் தேவரகொண்டா கூறியுள்ளார்.
அர்ஜூன் ரெட்டி படத்தின் மூலம் மெகா ஹிட் அடித்து தெலுங்கு ரசிகர்களை ஈர்த்தவர் இளம் நடிகர் விஜய் தேவரகொண்டா. இதையடுத்து இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியாகிய கீதா கோவிந்தம் படம் பயங்கரமாக  ஹிட் அடித்து இவர் நடித்த முதல் தமிழ் திரைப்படமான 'நோட்டா' தமிழகத்தில் நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்ததாக அவர் பல படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் அவர் டிவிட்டர் பக்கத்தில், என்னுடைய 25வது வயதில் ஆந்திரா வங்கியில் மினிமம் பேலன்ஸ் ரூ. 500 மெய்ண்டெயின் செய்யாததால் என் கணக்கு முடக்கப்பட்டது. 30 வயதுக்குள் செட்டிலாகுமாறு அப்பா கூறினார். நாங்கள் ஆரோக்கியமாக இருக்கும்போதே நீ செட்டில் ஆனால் தான் அந்த வெற்றியை உன்னால் ரசிக்க முடியும் என என் அப்பா கூறினார். 4 ஆண்டுகள் கழித்து போர்ப்ஸ் பட்டியலில் இடம்பிடித்துள்ளேன் என விஜய் பெருமிதமாக டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.