வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Murugan
Last Modified: வெள்ளி, 16 ஜூன் 2017 (14:19 IST)

இனிமேல் அப்படி நடிக்க மாட்டேன் - விரக்தியில் சிம்பு

வித்தியாசமான படங்களில் இனிமேல் நடிக்கப்போவதில்லை என நடிகர் சிம்பு அறிவித்துள்ளார்.


 

 
நடிகர் சிம்பு பல கமர்ஷியலான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்தாலும் தொட்டி ஜெயா, விண்ணைத் தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா உள்ளிட்ட வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களிலும் நடித்துள்ளார். அப்படங்களில் அவரின் வித்தியாசமான நடிப்பு பலரையும் கவர்ந்தது.
 
தற்போது அவர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திலும் வித்தியாசமான மூன்று வேடங்களில் அவர் நடித்து வருகிறார். இப்படத்திற்காக கொஞ்சம் எடை கூடி குண்டாக மாறிய சிம்பு, தற்போது தனது உடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
 
இந்நிலையில், இனிமேல் வித்தியாசமான வேடங்களில் நடிக்கப்போவதில்லை. அப்படி நடித்ததால் எனக்கு விருது கொடுத்து பாராட்டி விட்டார்களா என்ன?. எனவே, இனிமேல் ரசிகர்களுக்கு பிடித்தது போல் படங்கள் செய்யப் போகிறேன் என புலம்பி வருகிறாராம் சிம்பு. இவர் ஏன் இப்படி புலம்பி வருகிறார் என யோசித்து வருகிறார்களாம் அவரின் நெருங்கிய வட்டாரங்கள்...