1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 22 ஜூன் 2018 (10:06 IST)

நாட்டாமைய சமாளிச்ச நீங்க, ரெண்டு பொண்ணுங்க போட்ட சண்டைல சாஞ்சிட்டீங்களே பொன்னம்பலம்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்குள் ஏற்பட்ட சண்டையின்போது,  பொன்னம்பலம் ஒரு ஓரமாய் படுத்துத் தூங்கியதை  நடிகர் சதீஷ் கிண்டலடித்துள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'பிக்பாஸ் 2' நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பை எட்டியுள்ள நிலையில், பிக்பாஸில் இரு பெண்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. எல்லரும் லிவ்விங் ரூமில் அமர்ந்திருந்தபோது, நடிகர் பொன்னம்பலம் மட்டும் அங்கிருந்து எழுந்து சென்று ஒரு ஓரமாய் போய் சோஃபாவில் படுத்துக்கொண்டார். இதனை பலர் கிண்டலடித்து வருகின்றனர்.
இதுகுறித்து காமெடி நடிகர் சதீஷ், நாட்டாமை, முத்துவை எல்லாம் சமாளிச்ச பொன்னம்பலம், இப்படி ரெண்டு பொண்ணுங்க போட்ட சண்டையில சாஞ்சிட்டீங்களே என கிண்டலடித்து ட்வீட் செய்துள்ளார்.