வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Bharathi
Last Modified: சனி, 3 அக்டோபர் 2015 (10:20 IST)

தனியார் தொலைக்காட்சி மீது நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் பரபரப்பு புகார்

பிரபல தனியார் தொலைக்காட்சி மீது நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


 
 
தனியார் தொலைக்காட்சி ஒன்று வழங்கிய சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியில் நெறியாளராக இருந்தவர் லட்சுமி ராமகிருஷ்ணன். இவர் நடிகையும் ஆவார்.
 
அந்த நிகழ்ச்சியின் இயக்குநருக்கும் லட்சுமி ராமகிருஷ்ணனுக்கும் இடையே பிரச்சனை ஏற்படவே சொல்வதெல்லாம் நிகழ்ச்சியில் இருந்து லட்சுமி வெளியேறினார்.
 
இந்நிலையில் நேற்று சென்னை காவல்துறை ஆணையர் ஜார்ஜை சந்தித்த லட்சுமி ராமகிருஷ்ணன்  பிரபல தனியார் தொலைக்காட்சி மீது பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.
 
அந்தப் புகாரில் கூறப்பட்டதாவது , "நான் நடத்திய நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பெண்மணி ஒருவர் 25 வயதில் 8 முறை கருக்கலைப்பு செய்ததாக சொன்னார். என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா என்று கேட்டேன். அந்த வார்த்தை நான் நடத்திய நிகழ்ச்சியில் பிரபலமாகிவிட்டது. நான் 3 படங்களை இயக்கி இருக்கிறேன். 45 படங்களில் நடித்துள்ளேன்".
 
"ஒரு தனியார் தொலைக்காட்சி என்னை கிண்டல் பண்ணும் விதமாக நிகழ்ச்சி ஒன்றை தயாரித்து வெளியிட்டது. தற்போது மீண்டும் அந்த நிகழ்ச்சியின் 2-ம் பாகத்தை வெளியிட இருக்கிறது. என்னை இழிவுபடுத்தும் வகையில் அந்த நிகழ்ச்சி தயாரிக்கப்பட்டுள்ளது. அந்த நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும்" இவ்வாறு அந்த மனுவில் லட்சுமி ராமகிருஷ்ணன் குறிப்பிட்டிருந்தார்.