வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 11 ஏப்ரல் 2014 (15:00 IST)

ஹன்சிகா மீது வாலு படத்தயாரிப்பாளர் புகார்

சிம்பு - ஹன்சிகா காதல் கண்ணாமூச்சிக்கு நடுவில் சிக்கி கந்தலாகிக் கொண்டிருக்கிறார் தயாரிப்பாளர் நிக் ஆர்ட்ஸ் சக்ரவர்த்தி. இனியும் சகிக்க முடியாது என்ற நிலையில் ஹன்சிகா மீது தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் தந்துள்ளார்.
முன்பொரு காலத்தில் அஜீத்தின் ஆஸ்தான தயாரிப்பாளராக இருந்தவர் நிக் ஆர்ட்ஸ் சக்ரவர்த்தி. இரண்டு வருடங்களுக்கு முன்பு சிம்பு, ஜெய், ஹன்சிகா, தீ‌க்சா சேத் நடிப்பில் வேட்டை மன்னன் என்ற படத்தை ஆரம்பித்தார். படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் திடீரென்று அதே சிம்பு - ஹன்சிகா காம்பினேஷனில் சக்ரவர்த்தி தயாரிக்கும் வாலு படம் குறித்த விளம்பரங்கள் வெளியாயின. வேட்டை மன்னனை டீலில்விட்டு வாலு வளர ஆரம்பித்தது.
 

இந்தப் படத்தின் போதுதான் சிம்பு, ஹன்சிகா காதலிக்க ஆரம்பித்தனர். அந்த காவியக் காதல் படப்பிடிப்பு முடியும் முன்பே காவிய முறிவாக மாறியது. இப்போதையப் பிரச்சனை, படத்தின் சில பாடல் காட்சிகளை எடுக்க வேண்டும். ஆனால் ஹன்சிகா கால்ஷீட் தர மறுக்கிறார். மே, ஜூனுக்கு அப்புறம் பார்க்கலாம் என்கிறார். இந்த கால இடைவெளியில் சக்ரவர்த்தி வாங்கிய கடனுக்கான வட்டி குட்டி போட்டு அவரது பாங்க் பேலன்ஸை மட்டுமின்றி அவரின் பேலன்ஸையை காலாவதியாக்கிவிடும். 
ஹன்சிகாவுக்கு 70 லட்சம் சம்பளம் பேசி 55 ஐ தந்துவிட்டேன். பாடல் காட்சி முடிந்தால் மீதி 15 லட்சத்தை தருவதாகப் பேச்சு. இந்நிலையில் மே ஜூனுக்கு அப்புறம்தான் கால்ஷீட் தருவேன் என்றால் என்னுடைய கதை கந்தலாகிவிடும் என்று சங்கத்தை நாடியிருக்கிறார் சக்ரவர்த்தி. சங்கம் பஞ்சாயத்து பேசி ஹன்சிகாவின் கால்ஷீட்டை வாங்கித் தந்தால் மட்டுமே வாலு முன்னோக்கி நகர முடியும்.