வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி
Written By Muthukumar
Last Modified: சனி, 19 ஏப்ரல் 2014 (18:37 IST)

மகன் ஹீரோ, வருத்தத்தில் சந்தானத்தின் அம்மா

நான் ஹீரோவானதால் அம்மா வருத்தத்தில் இருக்கிறார்கள் என சந்தானம் கூறியுள்ளார்.
 
காமெடி வேடங்களில் நடித்து வந்த சந்தானம் முதல்முறையாக தனி ஹீரோவாக வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் நடித்துள்ளார். நகைச்சுவை நடிகர்கள் ஹீரோவாகும் போது ஒன்றிரண்டு விதிவிலக்கை தவிர பெரும்பாலும் அவர்களுக்கு தோல்வியே கிடைத்துள்ளது. ஒரு படம் சரி. தொடர்ந்து சந்தானத்தால் ஹீரோவாக தாக்குப் பிடிக்க முடியுமா என்பது விமர்சகர்களின் கேள்வி.
 
இதையேதான் சந்தானத்திடமும் அவரது அம்மா கூறியுள்ளார். "காமெடி வேடத்தில் நடிக்கும் போது அம்மாவுக்கு எந்த கவலையுமில்லை. எப்படியும் நாலைந்து படங்கள் என்னுடைய கையில் இருக்கும். ஹீரோவானால் வருடத்துக்கு ஒரு படம்தான் கிடைக்கும். வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் தோல்வியடைந்தால் என்னுடைய காpயர் காலாவதியாகிவிடும் என அம்மாவுக்கு பயம்" என கூறியுள்ளார் சந்தானம்.
 
தெலுங்கில் ராஜமௌலி இயக்கிய மரியாத ராமண்ணாவின் தமிழ் தழுவல்தான் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம். ஸ்ரீநாத் இயக்க, பிவிபி சினிமாஸ் படத்தை தயாரித்துள்ளது.