வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி
Written By Geetha Priya
Last Modified: திங்கள், 2 ஜூன் 2014 (15:35 IST)

பூஜையுடன் தொடங்கியது ஜெயம் ரவி, சுராஜ் படம்

தலைநகரம், மருதமலை, மாப்பிள்ளை, படிக்காதவன், அலெக்ஸ்பாண்டியன் படங்களை இயக்கிய சுராஜ் அடுத்து ஜெயம் ரவி நடிக்கும் படத்தை இயக்குகிறார். லட்சுமி மூவிமேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் பூஜை நேற்று சென்னையில் நடந்தது.
ஜெயம் ரவி தற்போது தனது அண்ணன் ராஜா இயக்கத்தில் நயன்தாராவுடன் ஒரு படமும், ஹன்சிகாவுடன் லக்ஷ்மண் இயக்கத்தில் ரோமியோ ஜுலியட் என்ற படத்திலும் நடித்து வருகிறார். ஆஸ்கர் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் அவர் நடித்த பூலோகம் ரிலீஸுக்கு தயாராக உள்ளது.
 
இந்நிலையில் அவர் சுராஜ் இயக்கத்தில் புதுப்படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். சுராஜின் கடைசிப் படங்கள் - படிக்காதவன், மாப்பிள்ளை - சரியாகப் போகவில்லை. அதன் பிறகு அவர் இயக்கியது அலெக்ஸ்பாண்டியன். கார்த்தியின் கரியரில் மிக மோசமான படமாகவும், தோல்வியாகவும் அது அமைந்தது. அலெக்ஸ்பாண்டியன் ஏற்படுத்திய பயத்தில் சுராஜ் இயக்கத்தில் நடிக்க பலரும் தயங்கிய நிலையில் துணிச்சலுடன் முன் வந்துள்ளார் ஜெயம் ரவி.
 
இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் பூஜை நேற்று சென்னையில் மிக எளிமையாக நடந்தது. ஜெயம் ரவி, அவரது தந்தை எடிட்டர் மோகன், படத்தின் தயாரிப்பாளர்கள் உள்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.