சுஜிபாலா பொய் சொல்லியிருந்தால் அவர் மீதும் நடவடிக்கை
இயக்குனர் ரவிக்குமார் தொடர்ந்து தொல்லை அளித்து வருவதாக சுஜிபாலா காவல்நிலையத்தில் புகார் தந்துள்ளார். இதனையடுத்து இரண்டு பேரையும் ஒரே நேரத்தில் விசாரிக்க முடிவு செய்துள்ளது போலீஸ்.
சுஜிபாலாவை நான் திருமணம் செய்து கொண்டேன். அதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. அவர் என் மனைவி. அவருக்கு வீடு, தோட்டம், கார் எல்லாம் வாங்கித் தந்தேன் என்கிறார் இயக்குனர் ரவிக்குமார்.
இதனை மறுத்து சுஜிபாலா பத்திரிகையாளர் சந்திப்பில் விளக்கம் அளித்தார்.
ரவிக்குமாருடன் எனக்கு திருமணமாகவில்லை. அவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். என்னை அடித்தார், சினிமாவிலிருந்து துரத்தப் பார்க்கிறார், கொலை மிரட்டல் விடுத்துள்ளார் என குற்றச்சாட்டுகளை அடுக்கினார். இப்போது இவர்களின் சண்டை காவல்நிலையத்தை எட்டியுள்ளது.
இருவரையும் ஒரே நேரத்தில் விசாரிக்க போலீஸார் முடிவு செய்துள்ளனர். விசாரணையில் யார் மீது தவறு இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். சுஜிபாலா சொன்னது பொய்யாக இருந்தால் அவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த பஞ்சாயத்துக்கு பிறகாவது இருவரும் தங்களின் லௌவுட் ஸ்பீக்கரை ஆஃப் செய்வார்களா?