வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Ravivarma
Last Modified: திங்கள், 9 ஜூன் 2014 (19:24 IST)

ஒரு ஊர்ல ரெண்டு ராஜா... ஒரு பாடகி

நடிகை தங்கமாக இருந்தால் குரல் தகரமாக இருக்கும் என்ற சினிமா பழமொழியை இளம் நடிகைகள் உடைத்திருக்கிறார்கள். ஆண்ட்ரியா, ரம்யா நம்பீஸன், ஐஸ்வர்யா என்று இளம் நடிகைகள் தங்களின் சொக்க வைக்கும் குரலில் சினிமாவில் பாடி வருகிறார்கள். அவர்களுடன் சமீபத்தில் இணைந்தவர் லட்சுமி மேனன்.
 
கண்ணன் இயக்கிவரும் ஒரு ஊர்ல ரெண்டு ராஜா படத்தில் லட்சுமி மேனன் ஒரு பாடல் பாடி பாடகியாக தனது கணக்கை துவங்கியுள்ளார்.
 
ஆர்.கண்ணன் இயக்கி வரும் இந்தப் படத்தில் விமல், சூரி நடிக்கின்றனர். நாயகி ப்ரியா ஆனந்த். கண்ணா லட்டு தின்ன ஆசையா விசாகா சிங்கும் இருக்கிறார். டி.இமான் இசை.
 
டி.இமான் எப்போது லட்சுமி மேனன் பாடுவதை கேட்டாரோ தெரியவில்லை. இந்தப் படத்தின் ஒரு பாடல் லட்சுமி மேனனுக்கு என்று முதலிலேயே உறுதி செய்து அவரை பாட வைத்து ஒலிப்பதிவும் செய்துவிட்டார்.
 
ஆள்தான் வளப்பமாக இருக்கிறார், குரல் வளம் இல்லை என்று யாரும் லட்சுமி மேனனைப் பார்த்து இனி கூறிவிட முடியாது.