வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி
Written By Geetha priya
Last Modified: சனி, 31 மே 2014 (10:21 IST)

அஜீத் படப்பிடிப்பு - யாரும் அரெஸ்டாகலையாம்

அஜீத் நடிப்பில் கௌதம் இயக்கி வரும் படத்தின் படப்பிடிப்பு சென்னையை அடுத்த பாலவாக்கத்தில் கடந்த சில தினங்களாக நடந்து வந்தது.

இரவு நேரத்தில் நடந்த படப்பிடிப்பு காரணமாக அப்பகுதி மக்களின் தூக்கம் பாதிக்கப்பட, நீலாங்கரையில் உள்ள காவல் நிலையத்தில் பொதுமக்கள் புகார் தந்தனர். முறையாக அனுமதி வாங்காமல் படப்பிடிப்பு நடத்தியதற்காக தயாரிப்பு மேலாளர், அவரின் உதவியாளர் மற்றும் லைட் பாய் ஒருவர் கைது செய்யப்பட்டனர். 
 
முறையாக அனுமதி வாங்காமல் படப்பிடிப்பு நடித்தியது தயாரிப்பு தரப்பின், இயக்குனரின் தவறு. கைது செய்வது என்றால் தயாரிப்பு மேலாளரையும், இயக்குனரையும் கைது செய்திருக்க வேண்டும். பதிலாக படத்தில் பணிபுரியும் லைட்மேனை எதற்கு கைது செய்தனர்? 
 
இந்த கேள்வி பூதாகரமாக எழுந்த நிலையில், முறையாக அனுமதி வாங்கியே படப்பிடிப்பு நடத்தப்பட்டது. ஊடகங்களில் வந்தது போல் யாரும் கைது செய்யப்படவில்லை என படயூனிட் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடுவில் நடந்தது என்ன? 
 
கடவுளுக்கும் கௌதமுக்குமே வெளிச்சம்.