1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. நட்சத்திர பேட்டி
Written By Papiksha Joseph
Last Modified: புதன், 16 டிசம்பர் 2020 (17:11 IST)

ஒரு காலத்துல நானும் அவனும்... பிக்பாஸ் பாலாஜி உடனான உறவை குறித்து மனந்திறந்த யாஷிகா!

அடல்ட் வாசிகளின் கனவு கன்னியாக திகழும் யாஷிகா ஆனந்த் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்து இளசுகளின் வட்டாரத்தில் படு பேமஸ் ஆனார். பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று பட்டிதொட்டியெங்கும் பெரும் பிரபலமடைந்தார்.
 
இந்நிகழ்ச்சியில் கிடைத்த அமோக வரவேற்பை வைத்து அம்மணி அடுத்தடுத்து புது படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். கூடவே அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வருவதை வாடிக்கையாக வைத்திருப்பார். அத்துடன் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து சர்ச்சைகளை உண்டாக்குவார். 
 
அந்தவகையில் தற்போது இன்ஸ்டா லைவ்வில் வந்த யாஷிகாவிடம் ரசிகர் ஒருவர், " பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கும் பாலாஜி முருகதாஸ் உங்கள் நண்பர் தானே? ஆனால், நீங்கள் ஏன் இன்ஸ்டாவில் ஒருவருக்கொருவர் ஃபாலோ செய்யவில்லை? என கேட்டதற்கு, "ஆம், நங்கள் இருவரும் நல்ல நண்பர்களாக இருந்தோம். அவனை நினைத்து நான் தற்ப்போது மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இப்படி ஒரு நாளுக்காக தான் அவர் ஆசைப்பட்டார் என கூறி தங்களுக்குள்ளே இருந்த உறவை குறித்து மனம் திறந்தார்.