வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. நட்சத்திர பேட்டி
Written By Mahalakshmi
Last Updated : சனி, 6 ஜூன் 2015 (13:14 IST)

பேய்ப்பட சீசனை நான் தொடங்கி வைக்கவில்லை - அனுஷ்கா பேட்டி

அனுஷ்கா முக்கிய வேடத்தில் நடித்துள்ள பாகுபலி படம் தமிழில் மகாபலி என்ற பெயரில் வெளியாகிறது. அதன் விளம்பர நிகழ்ச்சிக்காக சென்னை வந்த அனுஷ்கா பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.
 
இந்தப் படத்தில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன் என்று மூன்று ஹீரோயின்களாமே?
 
மூன்று கதாநாயகிகள் இருந்தாலும் மூன்று பேருக்குமே சமமான கதாபாத்திரங்கள். 
சண்டை காட்சிகளில் டூப் இல்லாமல் நீங்கள் நடித்ததாக கூறப்படுவது உண்மையா? 
 
பெரும்பாலான சண்டை காட்சிகளில் டூப் இல்லாமல் நடித்தேன். ஸ்டண்ட் மாஸ்டர் அந்த காட்சிகளை எப்படி பாதுகாப்புடன் படமாக்கப் போகிறார் என்பதை முதலிலேயே என்னிடம் விளக்கி விடுவதால் பயம் இல்லாமல் துணிச்சலுடன் நடித்தேன். 
 
இப்போது உள்ள பேய் பட சீசனுக்கு ஆரம்பம், உங்கள் அருந்ததிதானே? 
 
பேய் பட சீசனை நான் ஆரம்பிக்கவில்லை. அருந்ததிக்கு முன்பே நிறைய பேய் படங்கள் வந்துள்ளன. 
 
நீங்கள் எப்போதாவது, யாருடனாவது காதல்வசப்பட்டு இருக்கிறீர்களா? 
 
காதல் எல்லோருடைய வாழ்க்கையிலும் வந்து போகும். அதுபோல் என் வாழ்க்கையிலும் வந்து இருக்கிறது. அது என்னை கடந்து போய் விட்டது.
 
உங்களுக்கு பிடித்த கதாநாயகன் யார்? 
 
ரஜினிகாந்த், சூர்யா, கார்த்தி, பிரபாஸ் என்று எல்லா கதாநாயகர்களும் எனக்கு பிடித்தவர்கள்தான். ஒருவரின் பெயரை மட்டும் சொன்னால், அது செயற்கைத்தனமாக இருக்கும்.  

உங்களுக்கு திருமண பேச்சுவார்த்தை நடைபெறுவதாக பரவலாக பேசப்படுகிறதே? 
 
ஒரு பெண்ணின் வாழ்க்கையில், திருமணம் முக்கியமான அம்சம். எனக்கு திருமண பேச்சுவார்த்தை நடைபெறுவதாக கடந்த 6 வருடங்களாக பேசி வருகிறார்கள். நான் ஒளிவு மறைவாக திருமணம் செய்து கொள்ள மாட்டேன். எல்லோருக்கும் தெரிகிற மாதிரி முறைப்படி அறிவித்துவிட்டுத்தான் திருமணம் செய்து கொள்வேன். அது காதல் திருமணமாக இருந்தாலும் சரி, பெற்றோர்கள் நிச்சயிக்கும் திருமணமாக இருந்தாலும் சரி, என் திருமணத்தை நானே அறிவிப்பேன். 
உங்களிடம் உங்களுக்கே பிடித்தது என்ன? 
 
நான் எப்போதும் சிரித்துக்கொண்டே இருப்பேன். படப்பிடிப்பின்போது கூட அப்படித்தான் இருப்பேன். டைரக்டர் என் கதாபாத்திரத்தை நினைவூட்டி, அதுவாகவே இரு என்று சொல்வார். அந்த அளவுக்கு நான் சிரிப்பு பிரியை. 
 
உங்கள் அழகு ரகசியத்தை சொல்ல முடியுமா? 
 
என் அப்பா, அம்மா.
 
எதிர்கால திட்டம் எதுவும் வைத்து இருக்கிறீர்களா? 
 
எந்த திட்டமும் வைத்திருக்கவில்லை. நான் திட்டம் போட்டு எதையும் செய்வதில்லை. 
 
அருந்ததியும், பாகுபலியும் ஒரே மாதிரியான கதையம்சம் கொண்ட படங்களா? 
 
அருந்ததியை, பாகுபலியுடன் ஒப்பிடாதீர்கள்.