1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 19 அக்டோபர் 2020 (11:26 IST)

பறிபோகும் ஸ்மித்தின் கேப்டன் பதவி – ராஜஸ்தான் அணியின் புதிய கேப்டனாக இவரா?

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் புதிய கேப்டனாக ஜோஸ் பட்லர் நியமிக்கப்பட்ட உள்ளதாக சொல்லப்படுகிறது.

நடந்து வரும் ஐபிஎல் தொடரில் மிக மோசமாக விளையாடி வரும் அணிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் ஒன்று. அந்த அணி பிளே ஆஃப் செல்வதற்கான வாய்ப்புகள் மங்கிக்கொண்டே வருகின்றன. இந்நிலையில் அந்த அணி கேப்டன் ஸ்மித்தின் கேப்டன்ஸி குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதுமட்டுமில்லாமல் பேட்ஸ்மேனாகவும் அவரின் பங்களிப்பு மோசமானதாக உள்ளது.

இந்நிலையில் இப்போது அவரிடம் இருந்து கேப்டன்ஸியை பிடுங்கி அந்த அணியின் ஜோஸ் பட்லர் வசம் ஒப்படைக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே கொல்கத்தா அணியின் கேப்டனாக தினேஷ் கார்த்திக்கு பதிலாக இயான் மோர்கன் நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.