வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By sivalingam
Last Modified: ஞாயிறு, 18 ஜூன் 2017 (21:30 IST)

இந்திய அணி தோல்வி எதிரொலி: விராத்கோஹ்லி உருவப்படம் எரிப்பு

சாம்பியன்ஷிப் டிராபி கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியிடம் இந்திய அணி 180 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. விளையாட்டில் வெற்றி தோல்வி சகஜம் என்றாலும் ஒட்டுமொத்த இந்திய அணி, பாகிஸ்தான் அணியிடம் சரண்டர் ஆனதை இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் ஜீரணிக்கவே முடியவில்லை



 


இந்த நிலையில் இந்திய அணி தோல்வி அடைந்ததை அடுத்து கான்பூரில் உள்ள ரசிகர்கள் விராத்கோஹ்லி உருவப்படத்தை தீயிட்டு எரித்து வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் பாகிஸ்தானில் இந்த வெற்றியை திருவிழா போல் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்