1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 1 ஜனவரி 2018 (21:07 IST)

ரஞ்சி கோப்பையை வென்று வரலாறு படைத்த விதர்பா அணி

இந்தியாவின் மிகப்பெரிய உள்ளூர் கிரிக்கெட் போட்டியான ரஞ்சி கிரிக்கெட் தொடரில் விதர்பா அணி வெற்றிப்பெற்று வரலாறு படைத்துள்ளது.

 
91 டெஸ்ட் போட்டிகள் கொண்ட மிக நீண்ட தொடரான ரஞ்சி கோப்பை தொடர் அக்டோபர் மாதம் 6ம் தேதி தொடங்கியது. இதன் இறுதிப்போட்டியில் டெல்லி மற்றும் விதர்பா அணிகள் விளையாடியது. இதில், முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி முதல் இன்னிங்ஸில் 295 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
 
விதர்பா அணி முதல் இன்னிங்ஸில் 547 ரன்கள் குவித்தது. டெல்லி அணி இரண்டாவது இன்னிங்ஸில் 280 ரன்கள் எடுத்தது. இதைத்தொடர்ந்து 29 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய விதர்பா அணி 32 ரன்கள் விளாசி வெற்றிப்பெற்றது.
 
விதர்பா அணி 4வது நாளிலேயே டெல்லி அணியை வீழ்த்தி ரஞ்சி கோப்பையை வென்றது. தொடர்ச்சியாக மூன்று முறை ரஞ்சி கோப்பையை வென்று விதர்பா அணி வரலாற்று சாதனை படைத்துள்ளது.