ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 26 ஏப்ரல் 2021 (14:11 IST)

ஆர் சி பி அணியில் இருந்து விலகும் இரண்டு வீரர்கள்… இதுதான் காரணமா?

ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணிக்காக விளையாடும் இரண்டு ஆஸி வீரர்கள் விலகுவதாக அறிவித்துள்ளனர்.

ஐபிஎல் தொடரில் இந்த சீசனில் பெங்களூர் அணி மிக சிறப்பாக விளையாடி புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் அந்த அணியில் இடம்பெற்றுள்ள ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆடம் ஸாம்பா மற்றும் கைல் ரிச்சர்ட்ஸன் ஆகிய இருவரும் சொந்த காரணங்களுக்காக தொடரில் இருந்து விலகி ஆஸி செல்ல உள்ளனர். ஸாம்பா இந்த முறை ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. ரிச்சர்ட்ஸனுக்கு ஒரு போட்டியில் மட்டும் வாய்ப்பு வழங்கப்பட்டது.