வெள்ளி, 29 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By sinoj
Last Modified: சனி, 22 ஆகஸ்ட் 2020 (17:09 IST)

கொரோனா கவச ஆடையை நன்கொடையாக அளித்த பிரபல கிரிக்கெட் வீரர்

பிரபல இந்திய கிரிக்கெட் வீரரும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேட்னுமான கே.எல்.ராகுல் தொழிற் பாதுகாப்புப் படையினருக்கு கொரோனா கவச ஆடைகளை நன்கொடைகள் வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.
 
இந்தியாவில் கொரோனாவால் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுவரை 30 லட்சம் மக்கள் கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 
இதிலிருந்து மக்களைப் பாதுகாக்க  அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
 
இந்நிலையில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டன் கே.ல்.ராகுல் பெங்களூரில் உள்ள மத்திய தொழிற் பாதுகாப்புப் படையினருக்கு கொரோனா கவச உடைகளை (பி இ இ )நன்கொடையாக வழங்கியுள்ளார். இதுகுறித்துப் பலரும் அவரைப் பாராட்டி வருகின்றனர்