வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By sinojkiyan
Last Updated : செவ்வாய், 22 அக்டோபர் 2019 (16:08 IST)

’டெஸ்ட் மேட்ச் ’சின் போது குறட்டை விட்ட ’ஹெட்கோச் ’: நெட்டிசன்ஸ் கலகல ’மீம்ஸ்’ !வைரல் போட்டோ

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணிகளுக்கு இடையே மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் கடந்த 19ஆம் தேதி தொடங்கிய நிலையில் இந்த போட்டியில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 202 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த மேட்சின்போது, இந்திய கிரிகெட் அணியின் தலைமை பயிற்சியாளர் தூங்கிக்கொண்டிருக்கும் வீடியோ போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 
முன்னதாக டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 9 விக்கெட் இழப்பிற்கு 497 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளேர் செய்தது. இதனை அடுத்து பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சில் 162 ரன்களுக்கு ஆட்டமிழந்து. இதனால் அந்த அணி ஃபாலோ ஆன் ஆகி, இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்து விளையாடியது
 
நேற்றைய ஆட்ட நேர முடிவின் போது 8 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் எடுத்திருந்த தென்னாப்பிரிக்கா அணி, இன்று மீண்டும் இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. இன்றைய ஆட்டட்தில் தென்னாபிரிக்க அணி ஒரே ஒரு ரன் மட்டுமே எடுத்து இருந்த நிலையில் அடுத்தடுத்த 2 பந்துகளில் 2 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்களில் ஆட்டமிழந்தது. அடுத்தடுத்த பந்துகளில் இரண்டு விக்கெட்டுக்களை இந்திய பந்துவீச்சாளர் நதீம் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இதனை அடுத்து இந்தியா ஒரு இன்னிங்ஸ் மற்றும் 202 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. அதுமட்டுமின்றி இந்த தொடரின் மூன்று போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்று 3-0 என்ற புள்ளி கணக்கில் வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி உள்பட இந்திய வீரர்கள் அனைவருக்கும் இந்த வெற்றி பெருமைக்குரியதாக கருதப்படுகிறது.
 
இந்நிலையில்,இந்த முக்கியமான   மேட்சின்போது, இந்திய கிரிகெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி தூங்கிக்கொண்டிருப்பது போன்ற ஒரு  போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 
 
அடுத்து எப்போ எப்போ என எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் நெட்டிசன்ஸ் இந்த போட்டோவுக்கு மீம்ஸ் போட்டும், தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.