வியாழன், 28 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 18 ஜூன் 2019 (15:29 IST)

எங்கள் குடும்பத்தைத் திட்டாதீர்கள் – ரசிகர்களுக்கு மாலிக் வேண்டுகோள் !

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னனி வீரர்களில் ஒருவரான சோயிப் மாலிக் கிரிக்கெட் தோல்விக்காகத் தங்கள் குடும்பத்தைத் திட்டாதீர்கள் எனக் கூறியுள்ளார்.

உலகக்கோப்பைத் தொடரில் நடந்த போட்டில் இந்திய அணி அபாரமாக ஆடி 89 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் உலகக்கோப்பையில் பாகிஸ்தானிடம் தோற்றதில்லை என்ற சாதனையை இந்தியா தக்க வைத்துள்ளது. இதன் மூலம் தொடர்ந்து 7 முறையாக உலகக்கோப்பைப் போட்டிகளில் பாகிஸ்தானை வென்றுள்ளது இந்திய அணி. இந்த வெற்றிக்குப் பலரும் இந்திய அணிக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். ஆனால் பாகிஸ்தான் அணிக்கோ கடுமையான விமர்சனங்கள் கிடைத்து வருகின்றன.

போட்டிக்கு முந்தைய நாள் பாகிஸ்தான் அணி வீரர்கள் ஹோட்டல்களில் பீட்சா போன்ற உணவுகளை உண்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகி வீரர்கள் மேல் கண்டனங்களை எழுப்பின. இதனால் கடுப்பான சோயிப் மாலிக் ‘ ரசிகர்கள் எங்கள் குடும்பத்தின் மீது உரிய மரியாதை வைக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன். மோசமான முறையில் யாரையும் விவாதத்துக்கு அழைக்க முடியாது. நான் 20 ஆண்டுகளாக நாட்டுக்காக விளையாடி வருகிறேன். ஆனால் இன்னமும் நான் என்னைப்பற்றி விளக்கம் அளிப்பது  வேதனையாக உள்ளது. ஹோட்டலில் சாப்பிடுவது போன்ற புகைப்படங்கள் போட்டிக்கு முந்தைய நாளில் எடுக்கப்பட்டது அல்ல. அதற்கு முன்பாகவே எடுக்கப்பட்டது. பாகிஸ்தான் ஊடகங்கள் நம்பிக்கை அளிக்கும் விதத்தில் செயல்படப் போகின்றன எனத் தெரியவில்லை’ எனக் கூறியுள்ளார்.