வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahalakshmi
Last Updated : வெள்ளி, 31 அக்டோபர் 2014 (14:55 IST)

சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் கொல்கத்தா அணியை வாங்க முடியாதது வருத்தமே: ஷாருக்கான்

ஐ.எஸ்.எல் எனப்படும் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் கொல்கத்தா அணியை வாங்க முடியாதது ஏமாற்றம் அளிக்கிறது என பாலிவுட் பிரபலம் ஷாருக்கான் தெரிவித்துள்ளார்.
ஐ.பி.எல் வரிசையில் தற்போது புதியதாக இணைந்துள்ளது ஐ.எஸ்.எல் எனப்படும் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி. இதுகுறித்து நடிகர் ஷாருக்கான் கூறுகையில், சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் எனது பங்களிப்பும் இருக்க வேண்டும் என்று எண்ணினேன். அதற்காக ஒரு அணியை சொந்தமாக வாங்க வேண்டும் என்று நினைத்தேன். 
 
இதில் கொல்கத்தா அணியை வாங்க முயற்சித்தேன். ஆனால் அது நடக்கவில்லை. இதனால் மிகுந்த ஏமாற்றம் அடைந்தேன். எனினும் தன்னை விட இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கொல்கத்தா உரிமையாளராக இருக்க தகுதியானவர் என்று ஷாருக்கான் கூறியுள்ளார்.