1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : ஞாயிறு, 13 செப்டம்பர் 2020 (17:50 IST)

சி எஸ் கே முதலில் கேப்டன் ஆக நினைத்தது தோனியை அல்ல… இந்த வீரரைதான் – பத்ரிநாத் பகிர்ந்த ரகசியம்!

சி எஸ் கே அணிக்கு முதலில் சேவாக்கைதான் கேப்டனாக்க அணி நிர்வாகம் நினைத்ததாக அந்த அண்யின் முன்னாள் வீரர் பத்ரிநாத் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் வரலாற்றில் 3 முறைக் கோப்பைகளை வென்று மிக முக்கியமான அணியாகத் திகழ்ந்து வருகிறது சென்னை சூப்பர் கிங்ஸ். அந்த அணியின் கேப்டனாக எல்லா ஆண்டுகளும் தோனியே நீடித்து வருகிறார். ஆனால் முதல் முதலில் ஐபிஎல் ஆரம்பிக்கப்பட்ட போது சென்னை அணிக்கு கேப்டனாக நியமிக்க சேவாக்கைதான் அணி நிர்வாகம் முடிவு செய்திருந்ததாம்.

இதுகுறித்து சிஎஸ்கேவின் முன்னாள் வீரர் சுப்ரமண்யம் பத்ரிநாத் ‘சேவாக்கைக் கேப்டனாக்க அணி நிர்வாகத்தினர் நினைத்தனர். ஆனால் அவர் தன் சொந்த மாநிலமான டெல்லி அணிக்கு விளையாட முடிவு செய்தார். அதன் பின்னர்தான் சென்னை அணிக்கு தோனி தேர்வு செய்யப்பட்டார்’ எனக் கூறியுள்ளார்.