1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : திங்கள், 30 அக்டோபர் 2017 (11:40 IST)

கோலி ரத்தத்தில் செஞ்சுரி வெறி: சேவக் நக்கல் டிவிட்!!

நேற்று கான்பூர் மைதனாத்தில் நடைபெற்ற இந்தியா - நியூசிலாந்த் இடையேயான கடைசி ஒரு நாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.


 
 
இந்த வெற்றியின் மூலம் ஒரு நாள் தொடரை கைப்பற்றியது இந்திய அணி. கடைசி வரை விறுவிறுப்பாக நடைப்பெற்று கொண்டிருந்த ஆட்டத்தில் 6 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.
 
இந்த போட்டியில் கோலி சிறப்பாக விளையாடி செஞ்சுரி அடித்தார். இவரது செஞ்சுரி இந்திய அனி வெற்றிக்கு உறுதுணையாக இருந்தது. 
 
நேற்றைய போட்டியில் கோலி 113 ரன்கள் அடித்தன் மூலம் சர்வதேச ஒரு நாள் போட்டியில் அதிவேகமாக 9000 ரன்கள் கடந்தவரின் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளார். 
 
கோலியின் செஞ்சுரியை பல கிரிக்கெட் வீரர்கள் பாராட்டி வருகின்றனர். ஆனால், சேவக் தனது டிவிட்டரில் இது குறித்து வித்தியாசமான கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
சேவக் பின்வருமாறு டிவிட்டரில் பதிவிட்டுள்ளார், என்ன செஞ்சுரி... ஒருத்தரோட ரத்தத்துல செஞ்சுரி வெறி ஊறியிருந்தா மட்டும் தான் இந்த மாதிரிலாம் விளையாட முடியும். கோலிக்கு ரத்தத்தோட சேர்த்து ஹீமோகுளோபின் எல்லாத்துலயும் செஞ்சுரி வெறி இருக்கு என்று ட்விட் செய்துள்ளார்.