1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : சனி, 16 ஜனவரி 2021 (11:21 IST)

தொடக்க ஆட்டக்காரர்களை சீக்கிரமாக இழந்த இந்தியா – மழையால் ஆட்டம் பாதிப்பு!

பிரிஸ்பேனில் நடக்கும் நான்காவது டெஸ்ட் போட்டியில் இரண்டாவது நாளில் மழை குறுக்கிட்டதால் போட்டி தாமதமாகியுள்ளது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நேற்று தொடங்கிய நான்காவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 369 ரன்களுக்கு ஆட்டமிழந்தது என்பது குறிப்பிடத்தக்கது. லபுஷான் 108 ரன்களும், பெய்ன் 50 ரன்களும் வேட் 47 ரன்களும் எடுத்னர். இந்திய பந்துவீச்சாளர்களில் மிக அபாரமாக பந்துவீசிய தமிழகத்தை சேர்ந்த நடராஜன் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகிய இருவரும் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

அதையடுத்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி தொடக்க ஆட்டக்காரரான ஷ்ப்மன் கில்லை 7 ரன்களில் பறிகொடுத்தது. அதன் பின்னர் சிறப்பாக விளையாடிய மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ரோஹித் ஷர்மாவும் 44 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் இந்திய அணி இரண்டு தொடக்க ஆட்டக்காரர்களையும் இழந்து தடுமாறிய போது, நிதானமான போக்கை கடைபிடித்து ரஹானேவும், புஜாராவும் தடுப்பாட்டம் ஆடினர். இந்நிலையில் மழைக் குறுக்கிட்டதால் போட்டி நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது வரை இந்திய அணி 62 ரன்கள் சேர்த்து 2 விக்கெட்களை இழந்துள்ளது.