1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 9 பிப்ரவரி 2021 (10:51 IST)

ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்களை இழந்த இந்தியா!

இந்திய அணி அதிர்ச்சி அளிக்கும் விதமாக ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்களை இழந்துள்ளது.

இந்திய அணி பாலோ ஆன் ஆனாலும் இங்கிலாந்து அணியே தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸ் பேட் செய்தது. முதல் இன்னிங்ஸ் போல இல்லாமல் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசி இங்கிலாந்து அணியை 178 ரன்களுக்கு ஆல் அவுட் ஆக்கியுள்ளது. இந்திய அணியின் சுழல்பந்து வீச்சாளர் அஸ்வின் அற்புதமாக பந்து வீசி 6 விக்கெட்களைக் கைப்பற்றினார். இதன் மூலம் இந்திய அணிக்கு 419 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதன் பின்னர் தொடர்ந்து ஆடிய இந்திய அணி ஆட்டமுடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 39 ரன்களை சேர்த்துள்ளது. இன்று ஐந்தாம் நாளில் ஆரம்பத்திலேயே புஜாரா தன் விக்கெட்டை 15 ரன்களுக்கு இழந்தார். இதையடுத்து நிலைத்து நின்று ஆடிய ஷுப்மன் கில் அரைசதம் அடித்த நிலையில் அவுட் ஆனார். அதையடுத்து வந்த அஜிங்க்யே ரஹானே அதே ஓவரில் ரன் எதுவும் எடுக்காததால் அவ்ட் ஆனதால், இந்தியா இப்போது 92 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து தடுமாறி வருகிறது. தற்போது கோலியும் பண்ட்டும் களத்தில் உள்ளனர்.