1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By sivalingam
Last Modified: செவ்வாய், 16 மே 2017 (23:46 IST)

மும்பையை வீழ்த்தி இறுதி போட்டிக்கு சென்றது புனே

கடந்த இரண்டு மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இறுதிக்கட்டமாக இன்று முதலாவது பிளே ஆப் போட்டி மும்பையில் நடைபெற்றது.



 


இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ததால் புனே அணி பேட்டிங்கில் களமிறங்கியது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் புனே அணி 4 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தது. கடைசி இரண்டு ஓவர்களில் தோனியின் அதிரடியால் அந்த அணி 42 ரன்கள் குவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. கேப்டன் ரோஹித் சர்மா ஒரு ரன்னிலும் சிம்மன்ஸ் 5 ரன்களிலும், ராயுடு டக் அவுட்டும் ஆகினர். இதனால் கடைசி வரை தத்தளித்து வந்த மும்பை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 142 ரன்கள் மட்டுமே எடுத்து 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இந்த தோல்வியால் புனே அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இரண்டாவது பிளே ஆப் போட்டியில் வெற்றி பெறும் அணியுடன் மும்பை மீண்டும் மோதவுள்ளது.