1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : சனி, 25 நவம்பர் 2017 (07:50 IST)

ஜப்பான் வீராங்கனையை வீழ்த்தி அரையிறுதிக்கு பி.வி.சிந்து தகுதி

கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடர் போட்டி தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.

நேற்று நடைபெற்ற காலிறுதி போட்டியில் உலக தரவரிசையில் 3வது இடத்தில் உள்ள இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, 2 இடத்தில் உள்ள ஜப்பானை சேர்ந்த அகானே யமாகுச்சி என்ற வீராங்கனையுடன் மோதினார்.

ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்த பி.வி.சிந்து இறுதியில் 21-12, 21-19 என்ற நேர் செட்களில் அகானே யமாகுச்சியை எளிதில் வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றார். இந்த நிலையில் அரையிறுதியில் பி.வி.சிந்து, 6ஆம் நிலையில் உள்ள தாய்லாந்து வீராங்கனை ராட்சனோக் இன்டனோனை எதிர்கொள்ளவுள்ளார்