1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 2 ஜனவரி 2018 (19:31 IST)

நாட்டுக்காக ஐபிஎல் தொடரை புறக்கணித்த ஆஸிதிரேலிய வீரர்

ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் மார்ஷ் ஆஸ்திரேலிய அணியில் டெஸ்ட் போட்டி விளையாட ஐபிஎல் தொடரை புறக்கணித்துள்ளார்.

 
இந்தியாவில் ஐபிஎல் போட்டி உலக அளவில் பிரபலமடைந்தது. அயல்நாட்டு வீரர்கள் பலரும் கலந்துக்கொண்டு விளையாடும் போட்டி. உள்நாட்டில் விளையாடுவதை விட இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் விளையாடினால் நல்ல வருமானம் கிடைக்கும் என பலரும் விளையாட முன் வருகின்றனர்.
 
கடந்த ஆண்டு புனே அணியில் 4.8 கோடிக்கு விலைபோன ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் மார்ஷ் இந்த முறை ஐபிஎல் போட்டியில் விளைடாடுவதை புறக்கணித்துள்ளார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் மார்ஷ் கடந்த முறையை விட இந்த முறை நல்ல விலைக்கு ஏலம் போக வாய்ப்புள்ளது. இருந்தும் அவர் ஐபிஎல் போட்டியை புறக்கணித்துள்ளார்.
 
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
 
வருவாயின் பார்வையில் இது ஒரு மிகப்பெரிய முடிவுதான். இருந்தாலும் நான் ஆஸ்திரேலிய அணியில் தொடர்ச்சியாக டெஸ்ட் போட்டிகளில் விளையாட விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.