வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Caston
Last Modified: வியாழன், 15 செப்டம்பர் 2016 (17:18 IST)

தங்கம் வென்ற மாரியப்பனை எரித்து கொல்ல முயன்ற தந்தை: தங்கத்தின் பின்னணியில் இருக்கும் சோகம்!

தங்கம் வென்ற மாரியப்பனை எரித்து கொல்ல முயன்ற தந்தை: தங்கத்தின் பின்னணியில் இருக்கும் சோகம்!

பாரலிம்பிக் உயரம் தாண்டுதலில் தங்கம் வென்ற தமிழகத்தை சேர்ந்த மாரியப்பன் தங்கவேலுக்கு பலரும் பாரட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். ஆனால் மாரியப்பன் அளித்த பேட்டி ஒன்றில் தன் வாழ்வின் சோகங்களை கூறியுள்ளார்.


 
 
அதில் தன்னை தனது தந்தையே எரித்து கொல்ல முயன்றதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அதில், என்னையும் எனது தாயாரையும் உறவினர்கள் யாரும் மதித்ததில்லை. தாயை எப்போது பார்க்க போகிறேன் என்ற எதிர்பார்ப்பில் உள்ள நன் சில விஷயங்களைக் கூறி அழும் போது ஆறுதல் சொல்ல முடியாமல் தவிக்கிறேன்.
 
எனது தந்தை எங்களை பரிதவிக்க சென்றுவிட்டு போனவர், அவர் இப்போது வந்து உரிமை கோருவதாக கூறுகிறார் எனது தாய். கருணையே இல்லாமல் எனது தாயை கொடுமைப்படுத்தியவர் அவர். நான் அவரை பார்க்க கூட விரும்பவில்லை.
 
ஒருமுறை அவர் என்னை உயிருடன் தீவைத்து எரித்து கொல்ல முயற்சித்தார். எனது தாயையும், அவரது நான்கு குழந்தைகளையும் தவிக்க விட்டு விட்டு சென்றவருக்கு என் மனதில் என்றுமே இடம் கிடையாது. மாரியப்பன் தங்கவேலு என்று அவரது பெயரையும் சேர்த்து என்னை அழைப்பதைக் கூட நான் விரும்பவில்லை என்றார்.