வெள்ளி, 20 செப்டம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : செவ்வாய், 30 ஜூலை 2024 (11:44 IST)

பாரிஸ் ஒலிம்பிக்ஸில் சாதனைப் படைத்த இந்திய டேபிள் டென்னிஸ் வீராங்கனை மணிகா பத்ரா!

பாரிஸில் தொடங்கி நடைபெற்று வரும் ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் இந்திய வீரர்கள் பலர் விளையாடி வருகின்றனர். அவர்களில் யாரும் இன்னும் தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் டேபிள் டென்னிஸ் போட்டிகளில் இந்திய வீராங்கனை மணிகா பத்ரா ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இது காலிறுதி சுற்றுக்கு முந்தைய சுற்றாகும். இந்த சுற்றுக்கு முன்னேறும் முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையைப் படைத்துள்ளார் மணிகா.

பிரான்ஸின் ப்ரித்திகா பவடேவை அவர் 11-9, 11-6, 11-9, 11-7 ஆகிய நேர் செட்களில் வெற்றி பெற்று இந்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார். அவருக்கு இந்திய ரசிகர்கள் வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.