1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 22 நவம்பர் 2016 (14:15 IST)

கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளை நீக்கு: லோதா குழு அதிர்ச்சியளிக்கும் பரிந்துரை

லோதா கமிட்டி வழங்கிய பரிந்துரைகளை டிசம்பர் 3-ந் தேதிக்குள் அமல்படுத்த சுப்ரீம் கோர்ட்டு அவகாசம் வழங்கியது. ஆனால் அதற்கான எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் பி.சி.சி.ஐ. காலம் தாழ்த்தி வருகிறது. 


 
 
இந்நிலையில் கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளை ஒட்டு மொத்தமாக நீக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் லோதா குழு பரிந்துரை செய்துள்ளது. 
 
மேலும், முன்னாள் உள்துறை செயலாளர் ஜி.கே.பிள்ளை என்பவரை பி.சி.சி.ஐ. பார்வையாளராக நியமிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
 
லோதா குழுவின் இந்த அறிக்கையால் கிரிக்கெட் வாரியம் அதிர்ச்சி அடைந்துள்ளது.